Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » கண்ணீரில் கரைகின்ற இரவுகள்........

கண்ணீரில் கரைகின்ற இரவுகள்........

Written By Unknown on Thursday, 20 March 2014 | 07:38



நிலவு தொடும் தூரத்தில் - என் 

நினைவுகள் தொலைந்து நின்றாலும் 

கண்ணீரின் விளிம்புகளில் கரைகின்ற 

நிசப்தமான இரவுகளின் ஓரத்தில் - இவனது 
கனவுகள் கதறியழுகிறதே...... 

வார்த்தைகள் மௌனித்துப் போக 

இதயம் மட்டும் புலம்புகறிது..... 



விழிகளுக்குள் கருவாகி 

உள்ளத்தில் பிரசவித்து 

நெஞ்சறைக்கோளத்தினுள் 

செதுக்கப்பட்ட அவளின் நினைவுச் 

சிற்பங்களால் என் 

உணர்வுகளும் சிலுவையில் அறையப்பட்ட 

இயேசுவாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டே 

தவிக்கிறது..... 



காதலால் சிந்திய - என் 

அமிலக்கண்ணீரில் சிதைந்து போன 

எலும்பு மச்சைகளில் இன்னும் 

இரக்கமற்றவளின் காதல் சுவடுகள் 

கைகோர்த்து செல்கிறபோதும் 

குதியின் அபிசேகம் குறையவில்லையே..... 



காற்றோடு கலந்து 

மூச்சுக்காற்றில் சங்கமித்த அவளின் 

முனங்கள் ஓசை இன்னும் - இவனது 

செவிகளுக்குள் ரீங்காரமிடுகின்றது..... 



சந்தோசக் காற்றில் 

சிற்றுக் குருவியாய் 

சிறகடித்துத் திரிந்த - இவனது 

இளமைக்காலம் உன்னால் 

சிறகிழந்து திசையற்ற கூண்டுப்பறவையாய் 

முடங்கித் தவிக்கிறது..... 



பெண்ணே.... 

உனை சிந்திக்க தெரிந்த என் 

இருதயத்திற்கு 

எனை சிந்திக்க மறந்து விட்டதடி..... 

உன்னால் 

என் 

வார்த்தைகள் ஊனமானது போதுமடி 

காதலாவது சிற்பமாகட்டும்........ 



Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template