Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » கர்ப்ப கால நோய் தொற்றுகள்

கர்ப்ப கால நோய் தொற்றுகள்

Written By Unknown on Friday, 28 March 2014 | 00:37

அடிக்கடி அபார்ஷன், பிரசவத்துக்கு முன்பே குழந்தை வயிற்றில் இறந்து போவது அல்லது பிறந்த சில நாட்களிலேயே குழந்தை இறப்பது, பிறந்த பிறகும் குழந்தைக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்... இப்படி நிறைய புகார்களுடன் மருத்துவர்களை அணுகும் பெண்கள் பலர். இந்த அத்தனை பிரச்னைகளின் பின்னணியிலும், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட தொற்றே காரணமாக இருக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. அந்த நோய் தொற்றுகள் பற்றியும், அவற்றின் அறிகுறிகள், சிகிச்சைகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் அவர்.

''கர்ப்ப காலத்தின் முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் வைரஸ் இன்ஃபெக்ஷன் தொற்றும் வாய்ப்புகள் அதிகம். ஜிளிஸிசிபி எனப்படுகிற இந்தத் தொற்றில், ரூபெல்லா, ஹெர்ப்பிஸ் எனப்படுகிற அக்கி, பொன்னுக்கு வீங்கி உள்பட பலதும் அடக்கம். கர்ப்ப காலத்தின் முதல் மாதங்களில் இந்தத் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு தீவிரமாக இருக்கும். அதாவது, நஞ்சைத் தாண்டி, அந்தத் தொற்றானது, குழந்தையின் ரத்தத்தில் கலந்து, குழந்தையின் உறுப்பு வளர்ச்சியை பாதிக்கும். 

அதுவே இந்தத் தொற்றானது இரண்டாவது ட்ரைமெஸ்டர் எனப்படுகிற இடைப்பட்ட கர்ப்ப காலத்தில் தாக்கினால் இவ்வளவு பாதிப்புகள் இருக்காது. நஞ்சைத் தாண்டி வைரஸானது குழந்தையை பாதிக்கிற தீவிரம் குறையும். கடைசி 3 மாதங்களில் மறுபடி தீவிரம் அதிகமாகும்.இந்தத் தொற்று ஏற்பட்டால், கர்ப்பிணிகளுக்கு கருவே தங்காமல் போகலாம். அடிக்கடி கருக்கலையலாம். கருத்தரித்தாலும் வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்து போகலாம் அல்லது பிறந்த சில நாட்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்கலாம். 

குழந்தை பிறந்ததும், அதன் கேட்கும் திறனும், பார்வையும் பாதிக்கப்படும். மூளை வரை தொற்றானது தாக்கி, மூளை வளர்ச்சியை பாதித்து, வலிப்பு நோயை உருவாக்கலாம். குழந்தை பெரிய தலையுடன் பிறக்கலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சாதாரண காய்ச்சல், ஜலதோஷம், கழுத்து வீக்கத்தைக் கூட அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவருக்கு சந்தேகம் இருந்தால், பனிக்குட நீரை எடுத்து சோதித்துப் பார்த்து, வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்வார். 

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதன் தீவிரத்தைப் பொறுத்து, அந்தப் பெண் சில மாதங்கள் வரை கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுவார். ஏற்கனவே கருத்தரித்தவர் என்றால் ஸ்கேன் செய்து, பாதிப்புக்கேற்ப சிகிச்சைகள்பரிந்துரைக்கப்படும். இந்தத் தொற்றை உறுதி செய்ய பிரத்யேக ரத்தப் பரிசோதனைகள் உள்ளன. வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை, சோதனைகளும், சிகிச்சைகளும் கணவன், மனைவி இருவருக்குமே அவசியம். இருவருக்கும் அது முழுமையாக செய்யப்பட்டால்தான், அந்தத் தொற்றையும், அதன் பாதிப்பையும் முற்றிலும் ஒழிக்க முடியும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. 

- நன்றி அன்பர்களே.....-
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template