womenshealthmag.com
மனிதன் அறிவுக்கு எட்டியவரை கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே. எகிப்திய ஃபரோஸ் கல்லறைகளில் கிடைத்த தேனை சாப்பிட்டு பார்த்து இதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.( ஆதாரம்: விக்கிபீடியா)
Image courtesy: unbelievable-facts.tumblr.com/
1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பற்றவில்லையாம். ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம்.( ஆதாரம்: விக்கிபீடியா)
Image source:farm4.staticflickr.com
பண்டைய ரோமர்கள் கி.மு. 25 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்த் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவையின் அடிப்படை ஃபார்முலாதான் இன்றும் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை உருவாக்கப்படுகிறது.( ஆதாரம்: விக்கிபீடியா)

Image courtesy: abovetopsecret.com
வேல்ஸ் (இங்கிலாந்து) கடற்கரையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே இடத்தில் மூன்று கப்பல்கள் மூழ்கியுள்ளன. மூன்றும் மூழ்கியது டிசம்பர் 5 தேதிகளில். மூன்று விபத்துகளிலும் பிழைத்தவர்கள் ஒவ்வொருவர் மட்டுமே !. அவர்கள் மூவரின் பெயரும் ஹக் வில்லியம்ஸ் ! (ஆதாரம்:aol.com)
பட உதவி: nepalrodi.blogspot.com
ராம் பகதூர் பொம்ஜன், என்கிற ஒரு இளம் புத்த துறவி, ஒரு மரப்பொந்தில் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் 10 மாதங்கள் தவம் இருந்த்தாக நம்பப்படுகிறது. இந்த நம்பமுடியாத கூற்றை பரிசோதிக்க, டிஸ்கவரி சேனல் 4 நாட்கள் நேரடியாக பகல் மற்றும் இரவு முழுவதும் படமாக்கப்பட்டது. அதில் அவர் அந்த நான்கு நாட்களில் எவ்வித அசைவும் இன்றியும் வேறு எவ்விதமான தொடர்பும் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (பார்க்க வீடியோ ஆதாரம்) புத்த ஆதரவாளர்கள் அவரை “புத்தர் மறுபிறவி” என்கிறார்கள் (ஆதாரம்:documentarystrom.com)
0 comments:
Post a Comment